News March 1, 2026
திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பொறியாளர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி மின் பொறியாளர் ராஜு விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்க, அதைக் கொடுக்க விரும்பாத, கோம்பையைச் சேர்ந்த முத்து என்பவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச கண்காணிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், நேற்று ராஜு கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 16, 2026
திருச்சி: தேர்தல் விதிமீறல் – புகார் எண் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 27 பறக்கும் படை குழுக்கள், 27 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுக்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 0431-2905846, 0431-2905921 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
திருச்சி: இன்று முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 16, 2026
திருச்சி: இன்று முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


