News May 13, 2024
ரயில் ஓட்டுநர்கள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்?

ரயிலை ஓட்டுவதற்கு கார் போல ஆக்சிலரேட்டர் அழுத்த வேண்டிய அவசியமோ, ஸ்டேரிங் பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. அப்படியானால், ஆட்டோமேட்டிக்காக ரயில் ஓடும்போது ஓட்டுநர்கள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? அதற்குதான் VCD (Vigilance Control Device) என்று ஒரு பட்டன் உண்டு. ஓட்டுநர்கள் 60 நொடிக்கு ஒருமுறை அந்த பட்டனை அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், ரயில் தானாகவே நின்றுவிடும்.
Similar News
News March 28, 2026
குமரி தொகுதியில் 5-வது முறையாக தளவாய் சுந்தரம் போட்டி

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கடந்த 2001-ல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி வெற்றார். பின்னர் 2006, 2016-ல் தோல்வி அடைந்தார். மீண்டும் 2021-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 5-வது முறையாக களமிறங்கியுள்ளார். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 28, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி.. டிடிவி வாக்குறுதி

120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி வெளியிட்டுள்ளார். * விவசாயக் கடன் தள்ளுபடி *மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் * பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் * ஆண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு நிதி வழங்கப்படும் * கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும் * அரசு, தனியார் நிறுவனங்களில் 85% தமிழர்கள் பணி புரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
சாம்பியன் RCB-க்கு டஃப் கொடுக்குமா ஆரஞ்சு ஆர்மி!

நடப்பு சாம்பியன் RCB- SRH இன்று மோதுகின்றன. SRH-ல் இஷான், ஹெட், அபிஷேக், கிளாசென் ஆகியோர் பெரிய ஸ்கோரை விளாச உதவுவார்கள். கம்மின்ஸ் இல்லாமல் பவுலிங் மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறது. RCB-ல் கோலி, ஜிதேஷ், படிதர், சால்ட், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் சிறப்பான பார்மில் உள்ளார்கள். RCB-ன் பவுலிங்கும் வலுவாகவே உள்ளது. இந்நிலையில், பெங்களூரில் 284 ரன்களை விளாசி மிரட்டிய SRH, மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துமா?


