News February 28, 2026

வண்டலூர்: சிறுமி வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை

image

வண்டலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் சங்கர் என்பவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சங்கர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

Similar News

News March 1, 2026

JUST IN: செங்கல்பட்டுக்கு புதிய எஸ்.பி!

image

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு புதிய ஆட்சியர் வந்த நிலையில், தற்போது புதிய காவல் கண்காணிப்பாளராக அய்மான் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிபின் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளார் மாற்றப்பட்டுள்ளார். இன்று இந்த இருவரும் அவரவர்களுக்கு மாற்றப்பட்ட மாவட்டங்களில் பதவி ஏற்க உள்ளனர்.

News March 1, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் மற்றும் 4 துணை தாசில்தார்களுக்கு நிர்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய இடங்களில் அவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். நிர்வாக பணிகள் சீராக நடைபெற இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 1, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு கோர பலி

image

பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் பாலாஜி (23), கார்த்திகேயன்(23). இருவரும் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென குறுக்கே தெரு நாய் வந்ததால் நிலை தடுமாறி அவர்கள் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் உடல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

error: Content is protected !!