News February 28, 2026

கரூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<> க்ளிக் <<>>செய்து Grievance Redressal, கரூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

Similar News

News March 1, 2026

குளித்தலை அருகே வசமாக சிக்கிய மூவர்!

image

குளித்தலை அருகே காவல்காரன்பட்டி சந்தை பின்புறம் பணம் வைத்து சூதாடிய முத்து (60), ராஜேந்திரன் (46) மற்றும் காந்திராஜன் (30) ஆகிய மூன்று பேரைத் தோகைமலை போலீசார் இன்று (மார்ச் 1) கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

News March 1, 2026

அறிவித்தார் கரூர் ஆட்சியர்! முக்கிய தகவல்

image

கரூர் மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வரும் மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய பயனாளிகள் அத்தியாவசியப் பொருட்களைத் தங்கள் வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (பிப்.28) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!