News February 28, 2026
திருச்சி: மக்கள் தொடர்பு துறை அதிகாரிக்கு பதவி உயர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த நல்லதம்பி, திருச்சி மாவட்ட ஆட்சியரக செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2026
திருச்சி: +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள 31,215 பேர்

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில், 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,731 மாணவர்கள், 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 510 ஆண்கள், 457 பெண்கள் என 967 பேர் எழுத உள்ளனர். தேர்வு நல்ல முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 1, 2026
திருச்சி: மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். போர் சூழல் குறித்து அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என திருச்சி சர்வதேச விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


