News February 28, 2026
நாமக்கல்: கல்லூரி மாணவர் தற்கொலை!

பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (19) கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பூங்கா நகருக்கு வந்த இவர் தனது நண்பர்களை சந்தித்துள்ளார். இரவில் நண்பர்கள் தூங்க சென்ற பிறகு, இவர் வெளியில் இருந்து நீண்டநேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அவர் தூணில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தவலறிந்து வந்த பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Similar News
News March 4, 2026
நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க
News March 4, 2026
நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News March 4, 2026
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (04-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.128- ஆகவும், பண்ணை கோழி விலை ரூ.62- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


