News February 28, 2026
மதுரை: பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மதுரை, வெள்ளலூர் அருகே குறிச்சிபட்டியை சேர்ந்த சிறுமி(12) குறிச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாடு முட்டியதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் காயத்தின் வலி தாங்காமல் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News March 3, 2026
மதுரை: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
மதுரை மாவட்டத்தில் 33,958 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை 33,957 மாணவ, மாணவிகள் எழுதினா். எஞ்சியுள்ள 546 போ் தோ்வை எழுதவில்லை. இதேபோல, 836 தனித்தோ்வா்களும் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில், 761 போ் எழுதினா்; எஞ்சிய 75 போ் தோ்வை எழுதவில்லை.
News March 3, 2026
மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)


