News February 28, 2026

விரைவில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..

image

2025 – 26 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கிரயத் தொகை வழங்க ஏதுவாக ₹86.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 -25 அரவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ₹349 என்ற உயர்த்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை, 90,652 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை மக்களுக்கான அவசர உதவி எண்கள்

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

ஈரான் இஸ்ரேல் போரால் சிக்கிக்கொண்ட வங்கதேச வீரர்!

image

ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தனது உம்ரா யாத்திரையை முடித்துக்கொண்டு ஜெட்டாவில் இருந்து திரும்ப முடியாமல் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தவித்து வருகிறார். நானும் ஆயிரக்கணக்கான பயணிகளும் ஜெட்டா ஏர்போர்ட்டில் இருக்கிறோம். எப்படி டாக்கா செல்வது என்று தெரியவில்லை என அவர் பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் தேர்வு!

image

US – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி அலிரேஸா நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். தற்போது அவர் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராகவும், ஈரானின் மதக்கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

error: Content is protected !!