News February 28, 2026
நாமக்கல்: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ராஜாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி வெங்கடாசலம் (45). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்! முக்கிய தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நாளை (2.3.26) மற்றும் (3.3.2026) ஆகிய நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லங்களுக்கே வந்து வழங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பினை தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 1, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
நாமக்கல்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04286- 281331 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


