News February 28, 2026
இராம்நாடு: நாயை ஏவி கடிக்க விட்டவருக்கு நூதன தண்டனை

ராமநாதபுரம், நாகாச்சியை சேர்ந்த மணிகண்டன் கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணைக்கு அழைக்க சென்ற சாயல்குடி வனத்துறை அதிகாரிகள் மீது அவர் தனது வளர்ப்பு நாயை ஏவினார். காயமடைந்த அதிகாரியின் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. GH-ல் 30 நாள் நாய்க்கடி பிரிவில் பணியாற்ற நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
Similar News
News March 3, 2026
இராம்நாடு: முக்கிய எண்கள்; யூஸ் பண்ணிகோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 3, 2026
இராம்நாடு: தேர்தலை புறக்கணிப்போம் – எந்த ஊர்? ஏன்?

மண்டபம், வாலந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் அருளொளி நகர் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான சிமெண்ட் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். ராமேஸ்வரம் நேஷனல் ஹைவே இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. சாலை சீரமைக்கப்படாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


