News February 28, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 18, 2026
பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மார்ச்-18)
“வாகனத்தில் பயணம் செய்யும் நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பீர்.! கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கவனம் தேவை!!! என பதிவிட்டுள்ளனர்.
News March 18, 2026
திருப்பத்தூர்: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


