News February 27, 2026
ஆவடி நாசர் வீடு வீடாக பரப்புரை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை இன்று (பிப்.26) மாலை 8:30 மணி, நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று வீடு வீடாக சென்று பரப்புரை செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 1, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

பொன்னேரி அருகே ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மின்சார ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து நேற்று(பிப்.28) காவல்துறையினர் ரயில் நிலைய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான சுற்றி திரிந்த 3 வாலிபர்களை விசாரித்ததில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. இதில் 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 1, 2026
திருத்தணி அருகே துடிதுடித்து பலி!

செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(55). இவர், திருவாலங்காடு அடுத்த பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள மகள் ரம்யா(33) வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், புளியங்குண்டா கிராமத்திற்கு மக்ளுடன் மொபட்டில் சென்றார். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் தந்தை – மகள் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதித்த போது, விநாயகம் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News March 1, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது


