News February 27, 2026
வேலூர்: மகள் ரகசிய திருமணம் – தந்தை அடித்து கொலை!

அரசமரப்பேட்டையைச் சேர்ந்த வங்கி ஊழியர் யோகானந்தம் (63), தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில், மகள் ரகசிய திருமணம் செய்துகொண்டது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த மனைவி விமலாதேவி, மகன் கோவிந்தராஜ் மற்றும் மகளின் தோழி உட்பட 5 பேர் சேர்ந்து யோகானந்தத்தைத் தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
வேலூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
வேலூரில் நிலத்தகராறில் பரபரப்பு!

பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் வேங்கடேசன் இவரது மகன்கள் திருவேங்கடம் வயது 50, மணிகண்டன் வயது 43 இவர்கள் இருவருக்கும் கடந்த 22 ஆம் தேதி அன்று நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி மணிகண்டன் அவரது அண்ணனை தாக்கியுள்ளார் இதுகுறித்து திருவேங்கடம் கொடுத்த புகார் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்.
News February 28, 2026
வேலூரில் கோரா தீ விபத்து!

வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரி அருகே பாலமதி மற்றும் நாயக்கனேரி செல்லும் ஊர்களுக்கு இடையே மலை உள்ளது. இந்த மலைக்கு நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அந்த தீ மளமள என்று பரவியது. இதனால் மலையில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது. மலைக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


