News February 27, 2026
மயிலாடுதுறை: வீடு தேடி வரும் ரேசன் பொருள்- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ்ம் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதம் மார்.2 மற்றும் 3ஆம் தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்காக 38450 எக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு 39,702.375 எக்டர் குறுவை சாகுபடி முடிக்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி 66768 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 68640 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025ம் ஆண்டிற்கு மொத்த நெல் சாகுபடி 105340 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 108386 சாகுபடி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
மயிலாடுதுறை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 14-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதில் சிவில், குற்றவியல், வங்கிக்கடன், மோசடி, வங்கி சார்ந்த வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்தந்த கோர்ட்டுகளின் எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த கோர்ட்டுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


