News February 27, 2026
மோகன் பகவத் பேச்சால் சட்டம் மாற்றமா?

ராஜஸ்தானில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 30 ஆண்டுகளாக அமலில் இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டதால் கட்டுப்பாட்டை நீக்குவதாக சட்ட அமைச்சர் ஜோகராம் கூறியுள்ளார். இந்துக்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற வேண்டும் என மோகன் பகவத் கூறிய நிலையில், இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக காங்., சாடியுள்ளது.
Similar News
News February 28, 2026
5.9 கிலோ எடையுடன் பிறந்த ‘பீம் பாய்’

நியூயார்க்கில் பிறந்த பீம் பாயை பார்த்து டாக்டர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர். டெர்ரிகா & ஷான் என்ற தம்பதிக்கு 5.9 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதே ஹாஸ்பிடலில் 1.8 கிலோ எடையுடன் பிறந்த மற்றொரு குழந்தைக்கு அருகே, பீம் பாய் படுக்க வைக்கப்பட்டிருந்த போட்டோ வைரலாகி வருகிரது. இந்த பீம் பாயை மிஞ்சும் வகையில், 1955-ம் ஆண்டு, இத்தாலியில் 9.97 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே சாதனையாக உள்ளது.
News February 28, 2026
MGR, ஜெ. படத்தையும் EPS நீக்குவார்: செல்வப்பெருந்தகை

மதுரையில் நாளை PM மோடி பங்கேற்கும் NDA கூட்டணி பொதுக்கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த <<19263626>>பெரியார் படம் நீக்கப்பட்டது<<>> சர்ச்சையானது. இந்நிலையில் கூட்டணிக்காக பெரியார் படத்தை மட்டுமல்ல MGR, ஜெ., படத்தையும் கூட EPS நீக்குவார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அதிமுக என்பது பாஜகவின் கிளை கழகம் என்றும், தனது தலைவர்களான மோடி, அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதனை EPS நிறைவேற்றுவார் எனவும் சாடியுள்ளார்.
News February 28, 2026
மோடி மீதான USA-வின் பிடி இறுகியுள்ளது: ராகுல்

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் மற்றும் அதானி மீதான வழக்கு காரணமாக PM மோடி மீதான USA-வின் பிடி இறுகியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 10-15 ஆண்டுகளில், பாஜக தனது ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் அதானி நிறுவனத்திற்குள் முதலீடு செய்து வைத்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். அமெரிக்கா அதானி நிறுவனத்தின் மீது பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கு, பாஜகவின் நிதி ஆதாரத்திற்கு விழுந்த அடி எனவும் தெரிவித்துள்ளார்.


