News February 26, 2026
இந்தியரிடம் ₹35,000 கடன் பெற்ற பிரிட்டிஷ் அரசு

இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்ட பிரிட்டிஷ் அரசு, முதல் உலகப் போர் செலவுகளை சமாளிக்க மக்களிடம் கடன் வாங்கியது. இந்நிலையில் MP-ஐ சேர்ந்த விவேக் ருதியா, அலமாரியில் இருந்த சொத்து ஆவணங்களை சரிபார்த்த போது, தனது தாத்தா பிரிட்டன் அரசுக்கு ₹35,000 கடன் வழங்கிய ஆதாரம் கிடைத்தது. கடனின் மதிப்பு தற்போது கோடிகளில் இருக்கும் என நிபுணர்கள் கூறுவதால் வட்டியும், முதலுமாக பணத்தை திரும்பப்பெற அவர் முயற்சிக்கிறார்.
Similar News
News March 3, 2026
காங்கிரஸை வெளியேற்ற பாஜக விரும்புகிறது: வீரமணி

திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போல, பதவிகளை விட கொள்கைகள் முக்கியம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கு இடம் தரக்கூடாது என்று ஸ்டாலின் முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும், பாஜகவின் திட்டத்துக்கு காங்கிரஸ் பலியாகிவிட கூடாது என்றும் கூறியுள்ளார்.
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
News March 3, 2026
L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.


