News May 13, 2024

ஆந்திராவில் வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தல்?

image

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News September 9, 2025

ITR தாக்கல் செய்ய கடைசி நாளில் முட்டி மோத வேண்டாம்!

image

2025-ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய செப்.15 கடைசி நாளாகும். தாமதமாக தாக்கல் செய்தால், வட்டி, ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடைசி நாளில் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து, போர்ட்டர் சுமையால் பலராலும் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். ஒரு வாரமே இருப்பதால் முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT.

News September 9, 2025

ஆசிய கோப்பை போட்டிகளை எப்படி பார்ப்பது?

image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. போட்டியை எப்படி பார்ப்பது என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை சோனி குழுமம்தான் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும். மேலும், சோனி லைவ் ஆப், இணையதளத்திலும் பார்க்கலாம். சப்ஸ்கிரிப்ஷன் செய்வது அவசியம். SHARE IT.

News September 9, 2025

விஷம் கொடுத்து எனக்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகர் தர்ஷன்

image

தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தர்ஷன், சூரிய வெளிச்சத்தை பார்த்தே நீண்ட நாள்கள் ஆவதாகவும், சிறையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நீதிபதி தனக்கு விஷம் கொடுத்து இந்த துயரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!