News May 13, 2024

நாகை எம்பி எம்.செல்வராஜ் காலமானார்

image

இந்திய கம்யூ. கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ்(67) இன்று (13.05.24) அதிகாலை காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை(14. 05. 24) அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 6, 2025

திருவாரூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

சட்டவிரோதமாக மது விற்ற 14 பேர் கைது

image

மீலாது நபியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மது விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக நேற்றைய தினம் மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 675 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

News September 6, 2025

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி

image

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை சேர்ந்த நவீன் சிங்கப்பூர் செல்வதற்காக சித்தி விநாயகர் என்பவரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். நவீனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காமல் சித்தி விநாயகம் தலைமறைவானார் இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து பெங்களூரு வந்த சித்தி விநாயகத்தை பரவாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!