News February 26, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியினை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு, உதவியாளர்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்18 மாதங்களுக்கு தனியார் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியுடைய தனியார் முகமைகள் பிப்.28 தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 1, 2026
மயிலாடுதுறை: தலை நசுங்கி ஒருவர் பலி

சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (40) எலக்ட்ரீசியன், இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மயிலாடுதுறை உளுத்துகுப்பை பகுதியில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.28) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


