News February 26, 2026
பணத்தை இழக்க நேரிடும்; காவல்துறை எச்சரிக்கை!

சைபர் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆஃபர் என்ற பெயரில் உங்கள் Whatsapp அல்லது Telegram செயலிகளுக்கு வரும் லிங்க்(Link)-களை தொட வேண்டாம். லிங்குகளை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இழக்க நேரிடும் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க எண் 1930 அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


