News February 26, 2026

விழுப்புரத்தில் பரபரப்பு – வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

image

விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு சகோதரர்கள், தங்கள் வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கமல்ராஜின் மருத்துவச் செலவுகளால், 5 மாதங்கள் தவணை செலுத்தவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது, மனமுடைந்த கமல்ராஜ் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 28, 2026

விழுப்புரம்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<> க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விழுப்புரம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

செஞ்சியில் திமுக சார்பில் போட்டியிட மு.அமைச்சரிடம் விருப்பமனு!

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட, மேல்மலையனூர் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் இன்று(பிப்.27) செஞ்சி திமுக அலுவலகத்தில், மு.அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் விருப்ப மனு அளித்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News February 28, 2026

விழுப்புரத்தில் காவல்துறை அதிரடி !

image

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில் ஆரோவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நின்றிருந்த அய்யப்பன் (21), ரஞ்சித்குமார் (23) ஆகியோரைச் சோதனையிட்டதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 25 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!