News February 26, 2026

தருமபுரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தருமபுரி மாவட்டத்தில், ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையைச் சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா சிக்கியது. போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் பையைப் போட்டுவிட்டுத் தப்பியோடியது தெரிந்தது. இதுகுறித்து தருமபுரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

image

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 4, 2026

தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

image

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News March 4, 2026

தருமபுரி: ஓடிச் சென்று பார்த்த MP

image

தனியார் விவாத நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி MP நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இது குறித்து திமுக கழக முன்னோடிகளுடன் கலந்தாலோசித்தார்.

error: Content is protected !!