News February 26, 2026

திருப்பத்தூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் கொண்டம் கோதப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா (வயது 66) என்பவர் நேற்று (பிப்.25) பெங்களூரில் உள்ள உறவினரை பார்க்க தனது மனைவியுடன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது முதல் பிளாட்பாரத்தில் திடீரென மயங்கி, மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

திருப்பத்தூர் இலவச சட்ட உதவி மையம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்.

News March 5, 2026

திருப்பத்தூரில் 4 முனை போட்டி; துடிக்கும் கட்சிகள்!

image

திருப்பத்தூரில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன( திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்). கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியது. வணியம்படி தொகுதியில் அதிமுக வென்றது. இந்நிலையில், திமுக வெற்றியை தக்கவைக்கவும், அதிமுக இழந்ததை பெறவும் துடிக்கிறது. NTK வேட்பாளர்கள் ஏற்கனவே பணியை தொடங்கிய நிலையில், TVKவும் பம்பரமாய் சுழல்கிறது. எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி மக்களே?

News March 5, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு (மார்ச்.04) 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு உதவ ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!