News February 26, 2026
சென்னையில் துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்!

சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததால் காயமடைந்துள்ளனர். சூளை பள்ளத்தை சேர்ந்த பிரதீப் (25), சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), 2 சிறுவர்களை நாய் கடித்தது. அவர்களுக்கு ரேபிஸ் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், வெறிநாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News March 1, 2026
சென்னை: உங்க ஆபீஸில் பிரச்னையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். உங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
சென்னை: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News March 1, 2026
சென்னை: குடிநீர் புகார்களுக்கு இனி ஈஸி தீர்வு!

சென்னையில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” மொபைல் செயலியை பயன்படுத்துமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் புகார்களை அளித்தால், மிக விரைவாகத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளது. இந்தச் செயலியில் புகார்களைப் புகைப்படத்துடன் பதிவேற்றும் வசதி உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


