News February 26, 2026

இராமநாதபுரம்: போலீஸ் SI மீது தாக்குதல்

image

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரமேஷை தாக்கி மிரட்டிய வழக்கில் முருகராஜா (30), வீரமணி (45) கைது செய்யப்பட்டனர். நித்யா–முத்துக்குமார் இடையேயான முன்விரோத பிரச்சினை தொடர்பாக அவர்கள் நிலையத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News February 28, 2026

பரமக்குடி: தேர்தல் விருப்பமனு அளித்த பெண் – யார்?

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(பிப்.27) பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு செல்வி சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். இவர் முன்னாள் பரமக்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 28, 2026

இராம்நாடு: NO EXAM… ரூ.63,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 28, 2026

இராம்நாடு: நாயை ஏவி கடிக்க விட்டவருக்கு நூதன தண்டனை

image

ராமநாதபுரம், நாகாச்சியை சேர்ந்த மணிகண்டன் கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணைக்கு அழைக்க சென்ற சாயல்குடி வனத்துறை அதிகாரிகள் மீது அவர் தனது வளர்ப்பு நாயை ஏவினார். காயமடைந்த அதிகாரியின் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. GH-ல் 30 நாள் நாய்க்கடி பிரிவில் பணியாற்ற நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!