News February 26, 2026
மதுரை: பாலம் அருகே விபத்து; இளைஞர் பலி

திருமங்கலம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் மொக்கச்சாமி மகன் மாசாணம்(20). இவரது நண்பர் குமரவேல் (21) அழைத்து கொண்டு டூவீலரில் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாத்தான்குடி பாலம் அருகே வேகமாக சென்ற டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் தலையில் அடிபட்டு மாசாணம் உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
Similar News
News February 27, 2026
மதுரை: வாக்காளர்கள் கவனத்திற்கு…!

மதுரை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
BIG BREAKING மதுரை: திமுகவில் இணைந்த உசிலம்பட்டி MLA

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 2022ல் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்று தனிபயணம் மேற்கொண்ட அவர் இன்று தனது மகன் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத், உசிலம்பட்டி MLA அய்யப்பன் மற்றும் ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News February 27, 2026
மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும்

மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், புதை சாக்கடை உள்ளிட்ட வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் எளிதாக வரி செலுத்த மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என கூறியுள்ளார்.


