News February 25, 2026

கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு

image

சுஜில்கரை அடுத்த வைத்தியநாதபுரம் கிராமம் அருகே யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண். பங்களாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் (55) என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக திங்களூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Similar News

News March 14, 2026

கோபி அருகே விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், இன்று வேலைக்குச் சென்றபோது பூச்சாங்காட்டு தோட்டம் அருகே தனியார் கம்பெனி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான இவரது மரணம் குறித்து திங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

ஈரோடு மக்களே கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பின்படி, இன்று (14.03.2026) அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மக்கள் மனுக்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SHAREIT

News March 14, 2026

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை பொதுமக்கள் பெறும் வகையில், இன்று (14.03.26) மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான பின்வரும் கோரிக்கைகளை தீர்வு காணலாம். புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

error: Content is protected !!