News February 25, 2026

கோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை: EPS

image

வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஒருமித்த கருத்துடன் வலிமையாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியமைப்பதை ஸ்டாலின் வேடிக்கை பார்க்க போவதாகவும் கூறியுள்ளார். ஊழல் வழக்கில் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், அமைச்சர் நேரு மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News March 2, 2026

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்!

image

*இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம் *மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம் *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக் கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது *எல்லோரும் தம்மை விட்டு வேறு யாரையோ சீர் திருத்த முயல்கிறார்கள் *ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை

News March 2, 2026

ஈரானை திட்டமிட்டே தாக்கினாரா டிரம்ப்?

image

அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகும் தருணத்தில் USA தங்களது நாட்டை தாக்கிவிட்டதாக ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச உறவுகளை டிரம்ப் அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெனிவா கூட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஒப்பந்தத்திற்கு ஈரான் தயாராக இருந்தாலும் டிரம்ப் திட்டமிட்டே தாக்க உத்தரவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் சாடுகின்றன.

News March 2, 2026

No Bro., Why Bro? அண்ணாமலை

image

நேற்று CM ஸ்டாலின் தனது 73 பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு X தளத்தில் ராகுல் காந்தி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு பயன்படுத்திய சகோதரர் வார்த்தை இம்முறை இடம்பெறவில்லை. இதுபற்றி தனது X பதிவில் விமர்சனம் வைத்துள்ள அண்ணாமலை, இந்தாண்டு சகோதரர் வார்த்தையை ராகுல் பயன்படுத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு DMK-CONG தொகுதிப் பங்கீடு சிக்கலே காரணம் என பாஜகவினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!