News February 25, 2026

மாமனார் படுகொலையிலும் பாதை மாறாத நல்லகண்ணு

image

1990-சாதிய கலவரங்களால் தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவிய காலகட்டம். அப்போதுதான் நல்லகண்ணுவின் மாமனார் அன்னச்சாமி தேவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு பழிக்குப்பழியாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக நல்லகண்ணு யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை. மேலும் மாமனார் இறப்புக்கு அரசு அளித்த இழப்பீட்டு தொகையையும், வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி செலவுக்காக அளித்தார்.

Similar News

News March 11, 2026

₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

image

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!

News March 11, 2026

போர் எதிரொலி.. தீப்பெட்டி விலை உயர்ந்தது

image

தீப்பெட்டி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான Paraffin Wax-ஐ (மெழுகு) ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவில் வாங்கி வந்தது. போர் காரணமாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு மெழுகை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோவுக்கு ₹80-ல் இருந்து ₹130 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல் ஒன்றின் விலை ₹20 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!