News February 25, 2026

கடலூர்: மனமகிழ் மன்றத்தை திறந்து வைத்த எஸ்பி!

image

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், புதிதாக மனமகிழ் மன்றம அமைக்கப்பட்டது. அதனை இன்று(பிப்.25) கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். இம்மன்றத்தில் காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் TNPSC தேர்வு சம்பந்தமாக புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

Similar News

News February 26, 2026

கடலூர்: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

கடலூர் மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

கடலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே <<>>க்ளிக் செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 26, 2026

கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி குத்தகை ஏலம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்திலுள்ள 23 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக நாளை முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!