News February 25, 2026
JUST IN: தருமபுரியில் நாளை கடையடைப்பு!

தருமபுரி: பி.ஆர் ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், நோயாளியின் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட வேண்டி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டி, கவனம் ஈர்க்கும் வகையில்
நாளை(பிப்.26) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறவுள்ளது.
Similar News
News March 9, 2026
தருமபுரி மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 1(தருமபுரி)
2. பேரூராட்சிகள்- 10
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா-7
5. வருவாய் குறுவட்டம்- 23
6. வருவாய் கிராமங்கள்-479
7. ஊராட்சி ஒன்றியம்-9
8. கிராம பஞ்சாயத்து- 251
9. MP தொகுதி-1 ( தருமபுரி)
10. MLA தொகுதி- 5
11. மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
தருமபுரியிலிருந்து திருச்சி நோக்கி ஆ.மணி எம்.பி அழைப்பு

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் ஆ. மணி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய திருச்சி சிறுகனூரில் இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
News March 9, 2026
தருமபுரி: கால்வாயில் விழுந்து முதியவர் பரிதாப மரணம்

அரூர் அருகே கூக்கடப்பட்டியைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன்(70), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சாலையோரப் பாலத்திலிருந்து கீழே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


