News February 25, 2026
வேலூர் மாவட்டத்தில் 82 மையங்கள் தயார்!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7,134 மாணவர்கள், 8,522 மாணவிகள் என மொத்தம் 15,656 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 9, 2026
வேலூரில் 126 கிலோ குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டம் மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (இன்று 09.03.2026) ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 126 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு. சிவராமன் உத்தரவின்படி மேற்கொண்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
News March 9, 2026
வேலூர்: 250 கோழிகள் இலவசம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
வேலூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<


