News February 25, 2026
நாகை: கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது – போலீஸ் அதிரடி

நாகை வெளிப்பாளையம், பீச் ரோடு பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ மற்றும் பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையெடுத்து, முகமது இப்ராஹிம்(45), செய்யதுயூசுப்(49) ஆகியோரை போலீசார் கைது செய்து, 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 1, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 1, 2026
நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
News March 1, 2026
நாகை மாவட்டத்தில் பொழிந்த பனிப்பொழிவு

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைகாண் சாவடி, ஆலங்குடிசேரி, வாழ்மங்கலம் போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. எதிரில் வரும் வாகனம் கூட தெரியவில்லை என்று வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள். மாசி மாதம் வந்தால் மரம் எல்லாம் குளிரும் என்ற முன்னோர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாக இருக்கிறது.


