News February 25, 2026
தருமபுரியில் அதிரடி கைது!

மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் மொரப்பூர், தாசர அள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாசர அள்ளி பகுதியில் வகுத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன்(41), தாசர அள்ளியைச் சேர்ந்த வடிவேல்(46), சின்னசாமி(50), அரிச்சந்திரன்(57) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
Similar News
News March 3, 2026
தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று (02.03.2026) நடைபெற்றது. இந்த மக்கள் குறை கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 606 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
News March 3, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய மாணவன்

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டி அள்ளி இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அருள் கணேஷ், தொழிலாளி. இவருடைய மகன் கவுதம்ராவ் (வயது 15). தோக்கம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கவுதம்ராவ் திடீரென பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
News March 3, 2026
தருமபுரி இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02), இரவு முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.


