News February 25, 2026

ஆத்தூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி!

image

ஆத்தூர் மல்லியக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம் (25), நேற்று டூவீலரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். தாண்டவராயபுரம் அண்ணா நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 36,713 பேரும், 829 தனித்தேர்வர்களும் என மொத்தம் 153 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 200 பறக்கும் படைகள் உட்பட 3,587 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வு எழுதப் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

News March 2, 2026

ஆத்தூரில் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

image

ஆத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தேவி (36). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்த தேவி, நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!