News February 25, 2026
ஈரோடு அருகே பெண் துடிதுடித்து பலி!

ஈரோடு: கடத்தூர் சாணார்புதூரைச் சேர்ந்த அய்யம்மாள் (40), கடந்த 18-ஆம் தேதி தென்னை மட்டைகளை வீட்டிற்குள் அடுக்க முயன்றபோது, அதிலிருந்த பாம்பு கடித்துக் காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 26, 2026
கோபி: தவெக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 10-வது வார்டு தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் தங்கராசு, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக நகரச் செயலாளர் பிரிநியோ கணேஷ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக 26-வது வார்டு கிளைச் செயலாளர்கள் தர்மராஜ் மற்றும் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
News February 26, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்: முக்கிய தகவல்!

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளா, பிப்ரவரி 27 அன்று சித்தோடு பாரதிதாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது; உயர்கல்வி சேரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதை அதிகம் SHARE பண்ணுங்க!


