News February 25, 2026
விக்கிரவாண்டியில் சிறுவன் பரிதாப பலி!

விழுப்புரம்: கொட்டியாம்பூண்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் வெற்றி குணவேல் (11) நேற்று முன்தினம் வீட்டின் முன் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் சிக்கி இறுகியது. தொடர்ந்து பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மார்ச் (07) இரவு 10 மணி முதல் இன்று மார்ச்- (08) காலை 6 மணி வரைரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News March 7, 2026
விழுப்புரத்தில் சம்பளப் பிரச்னையா?

விழுப்புரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News March 7, 2026
விழுப்புரத்தில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<


