News February 25, 2026

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு(50). இவர், சரக்கு வாகனத்தில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் உறவினரின் ஈமசடங்கிற்காக ஒகேனக்கல் வந்தார். ஈமசடங்கை செய்த பிறகு ஒகேனக்கல் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதியில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலைக் கைப்பற்ரிய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 28, 2026

தருமபுரி : ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகையை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 28, 2026

தருமபுரி: தேக்குத் தோப்பில் தூக்கில் தொங்கிய SSI

image

தருமபுரி மாவட்டம், மணியக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட SSI சகாதேவன். இவர் கடந்த 2023ம் ஆண்டு புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமியை கர்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று தேக்குத் தோப்பில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 28, 2026

தர்மபுரியில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப். 27), இரவு முதல் இன்று காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!