News February 25, 2026
தென்னக ரயில்வே மீது கோபத்தில் கனிமொழி

சென்னை புறநகர் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில நாள்களாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவது நாள்தோறும் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மெத்தனம் காட்டாமல் இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 3, 2026
ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது இனி ரொம்ப ஈசி!

ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க, இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். அதனை வீட்டில் இருந்தபடியே செய்யும் வகையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. www.tnpds.gov.in இணையதளம் சென்று, ‘புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க’ ஆப்சனை கிளிக் செய்து விவரங்களை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் உங்கள் விவரம் அரசுக்கு சென்றுவிடும். அதன்பின், 1 வாரத்திற்குள் பெயர் இணைக்கப்படும். SHARE
News March 2, 2026
இனிதான் சம்பவமே இருக்கு.. டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். US இன்னும் பெரிய தாக்குதலைத் தொடங்கவில்லை. விரைவில் ஒரு பெரிய தாக்குதல் நடக்கப் போகிறது. ஈரான் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். போர் அதிக நேரம் நீடிப்பதை நான் விரும்பவில்லை. 4 வாரங்களில் அது முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் CNN-க்கு டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
News March 2, 2026
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


