News February 25, 2026
நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 3, 2026
மயிலாடுதுறை: திமுகவில் இனைந்த மாற்று கட்சினர்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AR ராஜா ஏற்ப்பாட்டில், நேற்று முஸ்டக்குடி கிராமம் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர், அதிமுக கிளை செயலாளர் பழனி உள்ளிட்ட 75க்கும் மேற்ப்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.
News March 3, 2026
மயிலாடுதுறை: மின் நிறுத்தம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்க்காடு மற்றும் மூவலூர் பகுதிகளில், இன்று (மார்ச்.3) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


