News February 25, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(24) இரவு 10 மணி முதல் பிப்- (25) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை
மேற் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
Similar News
News March 1, 2026
விழுப்புரம்: ரயில் மோதி லாரி ஓட்டுநர் பலி

விக்கிரவாண்டி அருகே வா.பகண்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் (48), சனிக்கிழமை குடும்பத்துடன் கோயில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் அருகே இயற்கை உபாதைக்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னை – மதுரை வைகை அதிவிரைவு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 1, 2026
விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலம்!

மயிலம்:அவனம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65), நேற்று வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மிதந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


