News February 24, 2026
உண்மைக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல: ராகுல்

டெல்லி AI மாநாட்டில் <<19213485>>அமைதி வழியில் போராடிய இளைஞர் காங்கிரசாரை கைது<<>> செய்தது சர்வாதிகார போக்கு, கோழைத்தனத்தின் சான்று என ராகுல்காந்தி சாடியுள்ளார். உண்மைக்காக குரல் கொடுப்பது தேசபக்தி; அது குற்றமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘சமரசம் செய்துகொண்ட பிரதமருக்கு’ எதிராக, நாட்டின் நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய உதய் பானு தலைமையிலான இளைஞர் காங்கிரசாரை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 1, 2026
நடிகர் அஜித்துக்கு என்னாச்சு.. பரபரப்பு அப்டேட்!

கார் ரேஸிங்கிற்காக துபாய் சென்ற நடிகர் அஜித் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அஜித் அங்கு சிக்கிக் கொண்டாரா என்ற பயத்தில் ஆழ்ந்திருந்த ரசிகர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும், அஜித் தற்போது எங்கு உள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
News March 1, 2026
மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்: செல்வப்பெருந்தகை

சர்ச்சையான பிரச்னைகளை கையில் எடுத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தும் இயக்கம்தான் BJP, RSS என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இந்த இயக்கங்களின் முகமாக PM மோடி இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை PM வந்தாலும் இங்கு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடமில்லை என கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி அறுபடை வீடுகளுக்கு சென்றாலும் அந்த முருகன் அவரை மன்னிக்கமாட்டார் எனவும் பேசியுள்ளார்.
News March 1, 2026
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.


