News February 24, 2026
கடலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
Similar News
News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி குத்தகை ஏலம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்திலுள்ள 23 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக நாளை முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
போட்டி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி I, தொகுதி – II/IIA மற்றும் தொகுதி – IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். பேச்சில் கலந்து கொள்பவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
கடலூர்: தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்

குமராட்சி பகுதியில் உள்ள உப்பனாற்றில் நேற்று 35 வயது வாலிபர் ஒருவர் தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமராட்சி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.


