News February 24, 2026

தி.மலை: குழந்தைகளுக்கு ஆதார் முகாம்

image

அங்கன்வாடிகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் இன்று(பிப்24) தொடங்கி வருகிற பிப்.28ஆம் தேதி வரை நடக்கிறது என திருவண்ணாமலை அஞ்சலங்களின் கோட்டக் கண்காணிப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Similar News

News March 1, 2026

தி.மலை: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் பகுதியில் ஏதேனும் அவசரப் பிரச்சனைகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், உடனடியாக அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு 100 என்ற எண்ணை டயல் செய்து காவல்துறை உதவியைப் பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 1, 2026

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

image

திருவண்ணாமலையில் அக்னித்தலமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி மாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 2 மாலை 6.29க்கு தொடங்கி, மார்ச் 3 மாலை 5.52க்கு நிறைவு பெறுகிறது எனக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 28, 2026

தி.மலை: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தி.மலை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9840369614-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!