News February 24, 2026
கடலூர் மாவட்டத்தில் 32,451 பெண் வாக்காளர்கள் அதிகம்

கடலூரில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 8 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமுள்ளனர். அவ்வகையில், திட்டக்குடி 3218, விருத்தாசலம் 1176, பண்ருட்டி 7028, கடலூர் 10,473, குறிஞ்சிப்பாடி 4225, புவனகிரி 1379, சிதம்பரம் 3779, காட்டுமன்னார்குடி 1173 என மொத்தம் 32,451 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நெய்வேலியில் மட்டும் பெண்களை விட 2 ஆண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.
Similar News
News March 2, 2026
கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 2, 2026
கடலூர்: வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடந்த தேர்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 1, 2026
காடாம்புலியூர் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு: EPS இரங்கல்

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் A. வேலு காடாம்புலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தையும் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


