News May 12, 2024

விலங்குகளுக்கு தண்ணீர் அளிக்கும் திட்டமுள்ளதா?

image

வீதிகளில் திரியும் விலங்குகளுக்கு வெயில் காலங்களில் தண்ணீர் அளிக்கும் திட்டம் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ஒருவர் தொடுத்த மனுவில், வெயில் காலங்களில் விலங்குகளுக்கு, கால்நடைத்துறை மூலம் தண்ணீர், உணவளிக்க உத்தரவிடக் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Similar News

News September 9, 2025

BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.

News September 9, 2025

இன்ஸ்டா சிறுவனுக்கு Thug கொடுத்த மாடல் அவந்திகா!

image

அவந்திகா மோகனின் இந்த ரிப்ளையை பார்த்த 90s-கிட்ஸ்கள், ‘தம்பி போய் படிக்கிற வேலைய பாருப்பா’ என கலாய்த்து வருகின்றனர். மாடலிங் கேர்ளான அவந்திகாவுக்கு 17 வயது சிறுவன் ஒருவன், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக இன்ஸ்டாவில் கேட்டுள்ளான். அதற்கு, ‘இப்போது நீ பரீட்சைகளை பற்றித்தான் கவலைப்பட வேண்டும், திருமணத்தை பற்றி அல்ல’ என அறிவுரை வழங்கியுள்ளார் அவந்திகா. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 9, 2025

சினிமாவின் உச்ச நட்சத்திரம் உதயநிதி: மா.சுப்பிரமணியன்

image

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், DCM உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, ‘திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக உள்ள நீங்கள் (உதயநிதி), விழா மேடையில் இருந்து இறங்கும்போது முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்’ என 2018-ல் தான் கூறியதாகவும், அவர் அதை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!