News February 24, 2026
ஆவடியில் 3 போலீஸ் அதிரடி மாற்றம்!

திருவள்ளூர்; ஆவடி போலீஸ் ஆணையகரத்தில் பணியாற்றி வந்த 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபடி, நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த லாரன்ஸ், திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் , காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News February 26, 2026
திருவள்ளூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 26, 2026
பூந்தமல்லி அருகே அதிரடி கைது!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, படூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை விசாரித்ததில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர் குப்பத்தைச் சேர்ந்த தீபக்(25), சரவணன்(24) எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
News February 26, 2026
திருவள்ளூரில் ரவுடி கொடூரக் கொலை!

எல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(26). இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு, பெரியபாளையம் அருகே கோகுல், அதே பகுதியைச் சேர்ந்த தீனா(22), பேரரசு(20), சிவக்குமார்(21), தியாகு(19) மற்றும் ஒருவர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் 5 பேர் சேர்ந்து கோகுலை சராமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


