News February 24, 2026

உளுந்தூர்பேட்டையில் அதிபயங்கர விபத்து!

image

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. மடப்பட்டு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நெல் அறுவை இயந்திரத்தின் மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் தாக்கத்தால் நெல் அறுவை இயந்திரம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு – மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறிய பதில்!

image

தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன. மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் கேட்டபோது, வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்துத் தேர்வு மையங்களிலும் காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!