News February 24, 2026
நெல்லை: கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

நெல்லை மாவட்டம், கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் பிரான்சிஸ் ஜவர்கலால் என்பவரது மகளுக்கு வைணவப் பெருமாள் (23) என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனை தட்டி கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை பெருமாள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வைணவபெருமாளை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை.
Similar News
News February 27, 2026
நெல்லை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News February 27, 2026
திருநெல்வேலி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

நெல்லை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
நெல்லை திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

நெல்லை மாநகராட்சி முன்னாள் மாவட்ட உறுப்பினரும், மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகியுமான தவுலத் நேற்று மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட உறுப்பினரை எம்எல்ஏ அப்துல் வகாப் வரவேற்றார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


