News February 24, 2026
காங்கேயம் அருகே விபத்து! சம்பவயிடத்திலேயே பலி

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் நேற்று காலை அவரது பேட்டரி மொபட்டில் காங்கேயம் நோக்கி சென்றுள்ளார். அப்போது நாட்டார்பாளையம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற முதியவர் குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வாரம் நாளை முதல் கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 60 பஸ்களும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 20 பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News March 12, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவல்துறை விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று (12/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்
News March 12, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.12) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


